![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/covidd-1.jpg?fit=1010%2C673&ssl=1)
இலங்கையில் பதிவான கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 3 இலட்சத்தை கடந்துள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாட்டில் இன்று (28) மேலும் 1,380 பேருக்கு கொவிட் தொற்று உறுதியானதையடுத்து இந்த எண்ணிக்கை பதிவாகியுள்ளது.
அதன்படி, நாட்டில் பதிவான கொவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 301,272 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே, கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 1,499 பேர் இன்று (28) குணமடைந்துள்ள நிலையில், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 271,855 ஆக உயர்வடைந்துள்ளது.
இதனிடையே எதிர்வரும் சனிக்கிழமை கோவெக்ஸ் திட்டத்தின் கீழ் 728,460 “அஸ்ட்ரா செனெகா” தடுப்பூசிகள் இலங்கை வந்தடைய உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.