
கொத்தலாவல சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் இன்றையதினம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பல்கலைக்கழக நுழைவாயிலில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
கொத்தலாவல சட்ட மூலத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தி நாடு முழுவதும் பல்கலைக்கழக விரிவுரையாளர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்கப் போராட்டத்துடன் இணைந்ததாகவே யாழ். பல்கலைக்கழக ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கொத்தலாவல சட்டமூலத்தை முறியடிக்க ஒன்றிணைவோம்,இராணுவக் கல்வியையும் பொதுக் கல்வியையும் ஒன்றாக்க முடியாது, இலவசக் கல்வியை இராணுவ மயப்படுத்துவதை நிறுத்து என்ற வசனங்கள் எழுதிய பாதைகளை ஏந்தியவாறு இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.