July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஹரின் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம்

ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு இன்று காலை வருகை தந்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வாக்குமூலமொன்றை பெற்றுக்கொள்வதற்காக குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வருமாறு விடுக்கப்பட்டிருந்த அழைப்புக்கமையவே அவர் அங்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பொன்று தொடர்பில் மேலதிக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் ஏப்ரல் 21 ஆம் திகதியும் ஹரின் பெர்னாண்டோவுக்கு சிஐடியில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்போது, அரசாங்கம் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது.

ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.