July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் தொழிற்சங்கப் போராட்டத்தில் ஈடுபட தீர்மானம்!

இலங்கையின் அனைத்து பல்கலைக்கழகங்களின் விரிவுரையாளர்களும் புதன்கிழமை (28)  ஒன்லைன் கற்பித்தலிலிருந்து விலக தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் பேராசிரியர் ஷாம பன்னேக தெரிவித்தார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இவ்வாறு அடையாள பகிஸ்கரிப்பை முன்னெடுக்க உள்ளதாக அவர் மேலும் கூறியுள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டத்தை நாடாளுமன்றத்தில் தோற்கடிக்க முடியாமல் போனால் எதிர்ப்பு நடவடிக்கை தேவைக்கேற்ப நீட்டிக்கப்படும் என்றார்.

அத்தோடு கல்வி, கல்வி சாரா மற்றும் மாணவர் சமூகங்கள் சம்பந்தப்பட்ட அனைத்து அரசு கல்லூரிகளிலும்  எதிர்ப்பு பிரசாரங்கள் தொடங்கப்படும் என்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் தலைவர் கூறினார்.