July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொவிட் தொற்றுக்குள்ளான மேலும் 48 பேர் மரணம்!

இலங்கையில் மேலும் 48 பேர் கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 28 ஆண்களும், 20 பெண்களும் அடங்குவதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,195 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் இன்று (27) மேலும் 1,185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இதையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 99,366 ஆக அதிகரித்துள்ளது.

அத்தோடு நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான 24,863 பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 2 இலட்சத்து 70,356 பேர் குணமடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது.