June 11, 2025 11:37:15

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

எதிர்க்கட்சி எம்.பி. ஹரின் பெர்னாண்டோவுக்கு சிஐடி அழைப்பாணை

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோவுக்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகும்படி அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

நாளை காலை 10 மணிக்கு சிஐடியில் ஆஜராகும்படி அவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

2019 ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து நடைபெற்ற ஊடக சந்திப்பொன்று தொடர்பில் மேலதிக வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதியும் ஹரின் பெர்னாண்டோவுக்கு சிஐடியில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்போது, அரசாங்கம் ஹரின் பெர்னாண்டோவை கைது செய்ய முயற்சிப்பதாக எதிர்க்கட்சி குற்றம்சாட்டியது.

ஹரின் பெர்னாண்டோ எதிர்வரும் செப்டம்பர் மாதம் 1 ஆம் திகதி வரை கைது செய்யப்பட மாட்டார் என்று சட்டமா அதிபர் திணைக்களம் உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.