July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

வீடுகளில் வேலை செய்யும் சிறுவர்களை கண்டறிய மேல் மாகாணத்தில் தேடுதல் நடவடிக்கை!

வீடுகளில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள சிறுவர்களை தேடி கொழும்பு மாவட்டம் உள்ளிட்ட மேல் மாகாணத்தில் பொலிஸார் விசேட நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளனர்.

இன்று முதல் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதன்போது வீடுகளில் வேலைகளுக்காக சிறுவர்களை வைத்திருப்பதாக தெரியவந்தால் வீட்டாருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, இதுபோன்று கொழும்பு உள்ளிட்ட நகர் பகுதிகளில் செல்வந்தர் வீடுகளில் சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகின்றது.

இதன்படி சிறுவர்பாதுகாப்பு அதிகார சபை, சிறுவர் பொலிஸ் பிரிவு மற்றும் புலனாய்வுப் பிரிவு ஆகியன இணைந்து அந்த சிறுவர்களை தேடி நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளன.