![Lockdown or Curfew Common Image](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/02/Lockdown-or-Curfew-new-Common.jpg?fit=1024%2C576&ssl=1)
இலங்கையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் அதிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு, களுத்துறை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன்படி கொழும்பு மாவட்டத்தில் பிலியந்தலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தும்போவில வடக்கு கிராம சேவகர் பிரிவின் கரதியான தோட்டம் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் களுத்துறை மாவட்டத்தில் அகலவத்தை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெகுலந்த கிராம சேவகர் பிரிவின் பிம்புரவத்த பகுதி விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
மேலும் அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொத்துவில் 13 கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.