July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தனிமைப்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் விடுவிப்பு

இலங்கையில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த மேலும் சில பிரதேசங்கள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

கேகாலை, இரத்தினபுரி, காலி, முல்லைத்தீவு மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த பிரதேசங்களே இவ்வாறு விடுவிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திரசில்வா தெரிவித்துள்ளார்.

இதன்படி கேகாலை மாவட்டத்தின் கேகாலை பொலிஸ் பிரிவில் மலவிட கிராமசேவகர் பிரிவில் கோலிந்த வத்த இலக்கம் 3 பிரதேசம், இரத்தினபுரி மாவடடத்தில் அயகம பொலிஸ் பிரிவில் பரகல கிராமசேவகர் பிரிவு தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய பொலிஸ் பிரிவில் பழைய கொலனி கிராமசேவகர் பிரிவின் திவிதுரு தோட்டம் மற்றும் மொனராகலை மாவட்டத்தின் மொனராகலை பொலிஸ் பிரிவில் ஹிந்தல கிராம சேவகர் பிரிவில் நக்கலவத்த மற்றும் மில்லகலேவத்த பிரதேசங்கள் விடுவிக்கப்பட்டுள்ளன.

மேலும் முல்லைத்தீவு மாவட்டத்தின் நாயாறு பொலிஸ் பிரிவில் செம்மலை கிழக்கு கிராமசேவகர் பிரிவில் நாயாறு மீன்பிடி பகுதி தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.