![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/01/Bandaranaike-International-Airport.jpg?fit=872%2C533&ssl=1)
இலங்கையின் முக்கியமான சுற்றுலாப் பகுதிகளில் ஐந்து உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்யவுள்ளதாக சுற்றுலாத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் சுற்றுலாத் துறையை புதுப்பித்து உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும் சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்கும் இது ஒரு புதிய உத்தியாக செயல்படுத்தப்படும்.
அதன்படி, சிகிரியா, கோகல்ல, அம்பாறை, அனுராதபுரம், மற்றும் ஹிங்குராங்கொட ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு இந்த உள்நாட்டு விமான நிலையங்களை உருவாக்க சுற்றுலா அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.