July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு!

கொரோனா தொற்றுக்கு மத்தியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி போராட்டங்களை முன்னெடுத்ததன் மூலம் மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு எதிராக குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நீதிக்கான மக்கள் அமைப்பின் தலைவர் தில்ஷன் கமகேவினால் கொழும்பு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இந்த போராட்டத்தை ஏற்பாடு செய்த தொழிற்சங்க தலைவர்கள் மற்றும் பங்கேற்பாளர்களுக்கு எதிரான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை தண்டனைச் சட்டத்தின் 262 வது பிரிவின் கீழ் ஒரு நோயை பரப்பும் வகையில் அலட்சியமாக செயற்படுதல், இலங்கை தண்டனைச் சட்டத்தின் பிரிவு 263 ன் படி மக்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும் என்று அந்த அமைப்பு குறித்த முறைப்பாட்டில் கூறியுள்ளது.

இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்காத சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களுக்கு எதிராக கடுமையாக சட்டத்தை அமுல்படுத்துமாறு குறித்த முறைப்பாட்டில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.