July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தும் பெற்றோருக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை!

வறுமை காரணமாக தமது பிள்ளைகளை அடிமைத்தனமான சேவைக்கு அமர்த்தும் பெற்றோர், அது தொடர்பில் உடனடியாக அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் அறிவிக்கும்படி பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்தோடு அடிமைத்தனமான சேவைகளில் ஈடுபடுத்தப்படும் சிறுவர்கள் துன்புறுத்தப்படுவதை கண்டால் அது தொடர்பில் மௌனமாக இருக்காமல் பொலிஸில் முறைப்பாடு செய்யும்படியும் அவர் கூறினார்.

இவ்வாறான தொழில்களில் அமர்த்தப்படும் சிறுவர்களை கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை தொடங்கப்படும் என்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர குறிப்பிட்டார்.