July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக சிறுமி இஷாலினி மரணத்திற்கு நீதி கோரி ஹட்டனில் ஆர்ப்பாட்ட பேரணி

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் உயிரிழந்த மலையக சிறுமி இஷாலினியின் மரணத்திற்கு  நீதிகோரி, இன்றைய தினமும் ஹட்டனில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

‘ஈரோஸ்’ அமைப்பின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டம் ஹட்டன் வர்த்தகக் கடைகளுக்கு முன்பாக இடம்பெற்றுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் பேரணியாக ஹட்டன் நகரத்துக்கு வந்தடைந்து, மணிக்கூட்டு கோபுரத்துக்கு முன்பாக கோஷங்களுடன் நீதி வேண்டி ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ‘ஈரோஸ்’ அமைப்பின் உறுப்பினர்கள், சமூக அக்கறை கொண்ட இளைஞர்கள், யுவதிகள், மத பேதமின்றி கட்சி பேதமின்றி சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.