July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக சிறுமி இஷாலினிக்கு நீதி கோரி யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிக்கு அமர்த்தப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்த சிறுமிக்கு நீதிகோரி, யாழ். மத்திய பேருந்து நிலையம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழில் உள்ள மகளிர் அமைப்புக்கள், மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இணைந்து யாழ். நகர மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்று காலை இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது, “சிறுவர்களை வேலைக்கு அமர்த்தாதே, சிறுவர்களின் எதிர்காலத்தை சிதைக்காதே, வேண்டாம்! வேண்டாம்! வன்முறை வேண்டாம்! பாதுகாப்போம், பாதுகாப்போம், சிறுவர் உரிமைகளை பாதுகாப்போம், மலையகச் சிறுமிக்கு நீதி வேண்டும், பாலியல் வன்முறை வேண்டவே வேண்டாம், பாதுகாப்போம், பாதுகாப்போம், சிறுவர் உரிமையைப் பாதுகாப்போம்” உள்ளிட்ட பல்வேறு கோசங்களையும் முன்வைத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா, யாழ். மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன், மக்கள் விடுதலை முன்னணியின் யாழ். மாவட்ட வேட்பாளர் ராமலிங்கம் சந்திரசேகரன், புதிய ஜனநாயக அரசியல் கட்சியின் பொதுச் செயலாளர் செந்தில்வேல் உட்பட முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், மகளிர், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

This slideshow requires JavaScript.