July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்தது

இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தைக் கடந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணியகம் தெரிவித்துள்ளது.

நேற்று பதிவான 43 மரணங்களுடன் இதுவரையில் இலங்கையில் 4,002 கொரோனா மரணங்கள் ஏற்பட்டுள்ளன.

கொரோனா தொற்று காரணமாக நேற்று 17 பெண்களும் 26 ஆண்களும் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களில் 30 முதல் 59 வயதுகளுக்கு இடைப்பட்ட எட்டு பேரும் உள்ளடங்குகின்றனர்.