![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/GMOA-1.jpg?fit=578%2C354&ssl=1)
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாகத் தேர்வை இடைக்கால நிர்வாகக் குழுவொன்றை நியமித்து, நடத்துமாறு மொரட்டுவை மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் குழுவொன்று தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு உட்படுத்திய போதே, நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டுள்ளது.
வேட்புமனு இரத்து செய்யப்பட்ட டாக்டர் ஜயருவன் பண்டாரவுக்கு மீண்டும் வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்பளிக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சுயாதீனமாக இடைக்கால நிர்வாகமொன்றை நியமித்து, அதன் ஊடாக நிர்வாகத் தேர்வை நடத்தி முடிக்குமாறு நீதவான் துமிந்த ராமநாயக்க உத்தரவிட்டுள்ளார்.