June 17, 2025 23:58:45

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்ப்பாணம் அராலியில் வாள்வெட்டுக் கும்பல் அட்டகாசம்

யாழ்ப்பாணம் – வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட அராலி வடக்கு பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்றைய தினம் இரவு வாள்வெட்டுக் குழுவினரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வாள்கள் மற்று இரும்புக் கம்பிகளுடன் வந்த இனந்தெரியாத நபர்கள் வீட்டு ஜன்னலின் கண்ணாடிகள் மற்றும் முச்சக்கரவண்டியின் கண்ணாடியினை உடைத்து முச்சக்கரவண்டிக்கு தீ மூட்டியுள்ளனர்.

நான்கு பேர் கொண்ட கும்பலொன்றே இவ்வாறு தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.  இதனால் வீட்டின் யன்னல் மற்றும் முச்சக்கர வண்டி என்பன சேதமடைந்துள்ளன.

வீட்டில் உள்ளவர்கள் உறங்கிக்கொண்டிருந்த வேளை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பாக வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.