February 23, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரிஷாட் பதியுதீனின் மனைவி உட்பட மூவர் கைது!

16 வயது சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் மனைவி, அந்த சிறுமியை வீட்டுவேலைக்கு அழைத்துச் சென்ற தரகர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

விசாரணை நடவடிக்கைகளுக்காக இவர்கள் கைது செயப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் இவர்களிடம் வாக்குமூலங்களை பெற்றுக்கொண்ட பொலிஸார், அதனை தொடர்ந்து மூவரையும் கைது செய்துள்ளனர்.

டயகம பிரதேசத்தை சேர்ந்த 16 வயதுடைய சிறுமி ஒருவர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் உயிரிழந்திருந்தார்.

குறித்த மரணம் தொடர்பில் பொலிஸாரினால் பல்வேறு கட்ட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.