April 30, 2025 20:14:29

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பேச்சுவார்த்தை தோல்வி: ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது!

ஆசிரியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் கிடைக்காத காரணத்தினால் நாடு முழுவதும் அதிபர் ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்பட்டுள்ள தொழிற்சங்க நடவடிக்கை தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஜனாதிபதி செயலாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையின் பின்னரே ஜோசப் ஸ்டாலின் இதனை கூறியுள்ளார்.

சம்பள முரண்பாட்டு பிரச்சனை, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகம் தொடர்பான பிரச்சனைகளை அடிப்படையாகக் கொண்டு நாடு முழுவதும் உள்ள அதிபர், ஆசிரியர்களை அணிதிரட்டி இன்று கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து ஜனாதிபதி செயலகம் வரையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

இதன்போது ஆசிரியர் சங்கங்களின் பிரதிநிதிகள் ஜனாதிபதி செயலகத்திற்குள் சென்று ஜனாதிபதி செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ஜோசப் ஸ்டாலின், எங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வுகள் எதனையும் அதிகாரிகள் வழங்கவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனால் எங்களின் போராட்டம் தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.

This slideshow requires JavaScript.