![Shavendra-Silva-](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/1575409444-Army-Commander-Shavendra-Silva-Bharat-Shakti-interview-L.jpg?fit=650%2C433&ssl=1)
சுகாதார விதிமுறைகளை பின்பற்றி திருமண வைபவங்களில் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என வழங்கப்பட்டுள்ள அனுமதியை ஒரு சிலர் துஷ்பிரயோகம் செய்வதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதனால் ‘திருமண கொத்தணி’ ஒன்று உருவாகலாம் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பை தவிர பிற மாவட்டங்களில் நடைபெறுகின்ற திருமண வைபவங்களில் 150 பேர் மாத்திரமே கலந்து கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எனினும், அதனை விட அதிகளவானவர்கள் திருமண வைபவங்களில் கலந்து கொள்கின்றனர். இதனால் ‘திருமண கொத்தணி’ ஒன்று உருவாகலாம் என அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறு பொறுப்பற்ற வகையில் மக்கள் செயற்படுவார்களாயின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என எச்சரித்துள்ளார்.
அத்துடன், தளர்த்தப்பட்ட போக்குவரத்து கட்டுப்பாடுகளை பொது மக்கள் துஷ்பிரயோகம் செய்தால் திருமணம் மற்றும் ஏனைய நிகழ்வுகளின் மீது கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய நிலையேற்படலாம்.
இதனிடையே, தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகளை பொது மக்கள் துஷ்பிரயோகம் செய்தமையின் காரணமாகவே கடந்த காலங்களில் கொரோனா வைரஸ் பரவியது.
இதேவேளை, நாட்டின் பல பகுதிகளில் டெல்டா வைரஸ் நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். குறிப்பாக நாளொன்றுக்கு 1500 தொற்றாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
இதனால் அரசாங்கத்தினால் சொல்லப்படுகின்ற உரிய வழிகாட்டுதல்களை பின்பற்ற வேண்டியது பொது மக்களின் கடமை என இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.