April 30, 2025 9:55:22

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழில் இராணுவ சிப்பாய் தன்னைத் தானே சுட்டு தற்கொலை!

File Photo

யாழ்ப்பாணம், நாவற்குழியில் இராணுவ சிப்பாய் ஒருவர் தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக கூறப்படுகின்றது.

நாவற்குழி தெற்கு படை முகாமில் கடமையிலிருந்த இராணுவ சிப்பாய் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிப்பாய் இராணுவத்தில் இணைந்து 10 மாதங்களே ஆகியுள்ளதாக கூறப்படுகின்றது.

வீட்டுப் பிரச்சனை காரணமாகவே இவர் தற்கொலை செய்துகொண்டுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிசாரும் மற்றும் சாவகச்சேரி பொலிஸாரும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.