![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/dda9636b0d6a4b7da30e601ddd309870ed6bcc56.jpg?fit=700%2C400&ssl=1)
சீனாவில் இருந்து மேலும் இரண்டு மில்லியன் ‘சினோபார்ம்’ கொவிட் தடுப்பூசிகள் இலங்கையை வந்தடைந்தன.
ஶ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் அவை இன்று அதிகாலை கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்ததாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
இதன்படி இலங்கைக்கு இதுவரையில் 9.1 மில்லியன் சினோபார்ம் தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இன்றைய தினம் கிடைக்கப்பெற்ற தடுப்பூசிகளின் மூலம் தற்போது நாட்டில் முன்னெடுக்கப்படும் தடுப்பூசி செலுத்தும் வேலைத்திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த முடியுமாக இருக்கும் என்று இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.