![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/saman.jpg?fit=1024%2C683&ssl=1)
வட மாகாணத்தின் பிரதம செயலாளராக வவுனியா அரச அதிபர் சமன் பந்துலசேன ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் 9 ஆவது மாகாணத்திற்கும் பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவர் பிரதம செயலாளராக ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த வகையில்,வவுனியா மாவட்டத்தின் தற்போதைய அரச அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன வடக்கின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளராக நியமிக்கப்பட்டிருந்த அ.பத்திநாதன் கடந்த 4 ஆம் திகதி ஓய்வு பெற்று சென்ற நிலையில், வடக்கு மாகாண பிரதம செயலாளர் பதவி வெற்றிடமாக காணப்பட்ட நிலையில், சமன் பந்துலசேனவை ஜனாதிபதி நியமித்துள்ளார்.