![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/07/123294376_1642852342542462_227464033783417269_n-e1626777592947.jpg?fit=1024%2C637&ssl=1)
இலங்கையில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்று லாப்ஃஸ் நிறுவனத்தின் பிரதித் தலைவர் திலக் டி சில்வா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதான எரிவாயு விநியோக நிறுவனமாக லாப்ஃஸ், எரிவாயு இறக்குமதியை இடைநிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.
நாட்டின் வெளிநாட்டு நாணய கையிருப்பு குறைவடைந்துள்ளதால் எரிவாயுவை இறக்குமதி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக திலக் டி சில்வா தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்க காலத்தில் இருந்து தாம் எரிவாயு விலை அதிகரிப்பொன்றைக் கோரி வரும் நிலையில், விலை குறைப்பே மேற்கொள்ளப்பட்டதாகவும், அதனால் தமக்கு பாரிய இழப்பை சந்திக்க நேரிட்டதாகவும் லாப்ஃஸ் நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சந்தை விலைகளுக்கு ஏற்ப எரிவாயு விலை அதிகரிக்கப்படாததால் தமக்கு 5.3 பில்லியன் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் லாப்ஃஸ் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் தாம் இறக்குமதிகளை இடைநிறுத்தியதாகவும், அதனால் நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு ஏற்படலாம் என்றும் நிறுவனத்தின் பிரதித் தலைவர் திலக் டி சில்வா தெரிவித்துள்ளார்.