July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மலையக சிறுமியின் மரணம்; ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு முன்னால் ஆர்ப்பாட்டம்

பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணிபுரிந்த நிலையில் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி கோரி, கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கொழும்பு பௌத்தாலோக்க மாவத்தையில் உள்ள பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டுக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சியின் இரத்தினபுரி மாவட்ட தமிழ் அமைப்பாளர் எஸ். ஆனந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டுள்ளனர்.

சிறுமியின் மரணம் தொடர்பில் முறையான விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும் உயிரிழந்த மலையக சிறுமிக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

This slideshow requires JavaScript.