
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் 20 ஆவது ஆண்டு நினைவு தின நிகழ்வு இன்று வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
வவுனியா தமிழ் ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் சு.வரதகுமார் தலைமையில் நடத்தப்பட்ட இந்த நிகழ்வில் நிமலராஜனின் உருவப்படத்திற்கு மூத்த ஊடகவியலாளர் பொ.மாணிக்கவாசகம் அஞ்சலி தீபத்தை ஏற்றி வைத்தார்.
இதன்போது நிகழ்வில் கலந்துகொண்டிருந்த ஊடகவியலாளர்கள் மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி, அஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் அஞ்சலி உரையை நிகழ்த்தியதுடன், நன்றியுரையை ஊடகவியலாளர் ந.கபிலநாத் நிகழ்த்தினார்.