May 31, 2025 21:33:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கல்வி அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி; ஆசிரியர்கள் தொடர்ந்தும் பணி பகிஷ்கரிப்பு

கல்வி அமைச்சர் மற்றும் இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் ஆகியவற்றுக்கு இடையே நடைபெற்ற கலந்துரையாடல் தோல்வியில் முடிவடைந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த கலந்துரையாடல் வெற்றியளிக்காத காரணத்தினால், ஆசிரியர்களின் பணி பகிஷ்கரிப்பு தொடரும் என்று இலங்கை ஆசிரியர் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்கள் இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து ஒதுங்கிக்கொண்டுள்ள நிலையில், அதனைத் தொடர்வதற்கு ஆசிரியர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.

சம்பளப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் கடந்த 12 ஆம் திகதி முதல் பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.