July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

மன்னார் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஆடிப் பிறப்பு நிகழ்வுகள்!

மன்னாரில் இன்றைய தினம் (20)ஆடிப் பிறப்பு கொண்டாட்ட நிகழ்வுகள் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டி மெல் தலைமையில் ‘ஆடிப்பிறப்பில் தமிழர் நாம் கூடிக் கொண்டாடி குதூகலிப்போம்’ எனும் தொனிப்பொருளில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.

வடக்கு மாகாண கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும், இளைஞர் விவகார அமைச்சின் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் மன்னார் மாவட்ட செயலகத்தினால் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது.

நிகழ்வின் ஆரம்பமாக விளக்கேற்றலுடன் ‘நவாலியூர்’ சோமசுந்தரப் புலவரின் உருவப்படத்திற்கு மாவட்ட அரசாங்க அதிபர் மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதனைத் தொடர்ந்து மாவட்ட செயலக அலுவலர்கள் புலவரின் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தியதுடன், ஆடிப்பிறப்பு தொடர்பில் நிகழ்வுகள் மற்றும் சிறப்பு சொற்பொழிவு ஆகியவை இடம்பெற்றது.

இதன்போது மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மாவட்ட செயலகத்தின் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.

அத்துடன், விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆடிக்கூழ் மற்றும் கொழுக்கட்டை என்பன பரிமாறப்பட்டது.

This slideshow requires JavaScript.