July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கையில் ஏழு பேர் டெங்கு நோயால் மரணம்

நாட்டில் தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்க அதிகரித்திருப்பதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

மேல் மாகாணத்திலேயே பெரும் எண்ணிக்கையிலான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். இவர்களின் எண்ணிக்கை 7,352 ஆகும். இதில் கொழும்பு மாவட்டத்தில் 4,600 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

இதேவேளை, இவ்வருடம் இதுவரையிலும் 15,272 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் ஹிமாலி ஹேரத் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க, இந்த ஆண்டில் இதுவரையான காலப்பகுதியில் ஏழு பேர் டெங்கு நோயால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.