![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2021/06/174180792_1894956470669659_5488492396052635257_n-e1623066054148.jpg?fit=1024%2C660&ssl=1)
இலங்கையின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தான் போட்டியிட எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே, ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
தனது திட்டங்களைச் செயற்படுத்த 3 வருடங்கள் மாத்திரமன்றி, மேலும் 5 வருடங்களும் இருப்பதாக ஜனாதிபதி இதன்போது குறிப்பிட்டுள்ளார்.