October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘மக்கள் பிரச்சினைகளுக்கு கூட்டாக குரல் கொடுக்க சர்வ கட்சி மாநாடு உதவும்’: ஐக்கிய தேசியக் கட்சி

பொதுமக்களின் பிரச்சினைகளுக்கு கூட்டாக குரல் கொடுப்பதற்கு சர்வ கட்சி மாநாடு உதவும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பு ஏற்பாடு செய்திருந்த சர்வ கட்சி மாநாடு தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியின் நிலைப்பாட்டை விளக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

சர்வ கட்சி மாநாட்டின் அடுத்த கட்ட கலந்துரையாடல்களில் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் கலந்துகொள்ளவுள்ள எதிர்பார்ப்பதாகவும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.

சமூக நீதிக்கான தேசிய அமைப்பின் சர்வ கட்சி மாநாடு பொதுமக்கள் எதிர்பார்த்துள்ள நேர்மறையான செயற்பாடாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.