![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/12/WhatsApp-Image-2020-12-22-at-6.14.20-PM.jpeg?fit=1024%2C576&ssl=1)
இலங்கை முழுவதும் நேற்று முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 3009 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
பொலிஸ்மா அதிபரின் ஆலோசனைக்கமைய இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், இந்த நடவடிக்கையில் 14,927 பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இதன்போது மதுபோதையில் வாகனம் செலுத்திய 580 பேரும், போதைப் பொருள் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 1250 பேரும், நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த 645 பேரும், பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த 98 பேரும், சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்த 5 பேரும் மற்றும் வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 431 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது 52 மோப்ப நாய்களும் ஈடுபடுத்தப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.