July 3, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு தேர்தல் ஆணைக்குழு எச்சரிக்கை!

தேர்தல் ஆணைக்குழு தொடர்பில் போலி செய்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என ஆணைக்குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவினால் இது தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

தமது நிர்வாக நடவடிக்கைகள் குறித்து தவறான, போலி தகவல்கள் பல்வேறு ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற தவறான மற்றும் பொய்யான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அத்தோடு, தேர்தல்கள் ஆணைக்குழு தொடர்பில் பல்வேறு கருத்துகள் மற்றும் நேர்மறையான விமர்சனங்கள் பாராட்டப்பட்ட போதிலும், எந்தவொரு அமைப்பு அல்லது தனிநபரின் பிழையான கருத்துகளுக்கும் தேர்தல் ஆணைக்குழு தலைவணங்காது என கூறியுள்ளது.