
இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள செய்திகளை வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில மறுத்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு குறித்து வெளியாகிய செய்திகளில் உண்மைத்தன்மை இல்லை என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் அடுத்த 27 நாட்களுக்குத் தேவையான பெட்ரோல் மற்றும் 24 நாட்களுக்குத் தேவையான டீசல் என்பன கையிருப்பில் இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எரிபொருள் தட்டுப்பாடு உள்ளதாக எதிர்க்கட்சியினர் போலி பிரசாரங்களை பரப்ப ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர் குற்றம்சாட்டியுள்ளார்.