July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

கற்பிட்டியிலிருந்து கடலுக்கு சென்ற மூன்று மீனவர்கள் மாயம்; தேடும் பணி தீவிரம்!

(File photo)

புத்தளம் – கற்பிட்டி பகுதியிலிருந்து கடற்றொழிலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் காணாமற் போயுள்ளதாக உறவினர்கள் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளனர்.

கற்பிட்டி – வன்னி முந்தல் மற்றும் மணல் தோட்டம் பகுதியை சேர்ந்த 45, 26 மற்றும் 21 வயதான மூன்று மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

இவர்கள் மூவரும் கடந்த வௌ்ளிக்கிழமை (09) அதிகாலை மீன் பிடிக்கச் சென்றுள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டி பொலிஸ் நிலையத்திலும் கற்பிட்டி கடற்படை முகாமிலும் உறவினர் அளித்த முறைப்பாட்டுக்கு அமைய காணாமற் போனவர்களை தேடும் பணியை கடற்படையினர் முன்னெடுத்துள்ளனர்.

காணாமற் போன மீனவர்கள் தொடர்பிலான விசாரணைகளை கற்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.