July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிப்பு!

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட 16 பேர் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த 8 ஆம் திகதி பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதன் காரணமாக குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டதன் பின் நீதிமன்றத்தினால் பிணை வழங்கப்பட்ட நிலையில், பொலிஸாரினால் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.

கடந்த 9 ஆம் திகதி முதல் முல்லைத்தீவு தனிமைப்படுத்தல் முகாமில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்கள் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதையடுத்து பொலிஸாரின் இந்த செயலை கண்டித்தும், இணையவழி கல்வி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள சிக்கல்களுக்கு தீர்வு கோரியும் இலங்கை ஆசிரியர் சங்கத்தினர் திங்கட்கிழமை முதல் இணையவழி கற்பித்தலில் இருந்து விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.