July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இலங்கைக்கு 1.5 மில்லியன் ‘மொடர்னா’ தடுப்பூசிகளை நன்கொடையாக வழங்கியது அமெரிக்கா

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் அமெரிக்காவினால் 1.5 மில்லியன் ‘மொடர்னா’ தடுப்பூசிகள் இலங்கைக்கு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

அமெரிக்காவில் இருந்து இன்று காலை அந்தத் தடுப்பூசி தொகை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

”மொடர்னா தடுப்பூசிகள் ‘கொவெக்ஸ்’ ஊடாக இலங்கைக்கு வந்துள்ளதை, அமெரிக்க மக்கள் சார்பாக அறிவிப்பதில் நான் பெருமையடைகிறேன். இந்நன்கொடை உயிர்களைப் பாதுகாக்கவும் இலங்கை மக்களின் அவசர சுகாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்யவும் பொருளாதாரப் பாதிப்புகளைத் தணிக்கவும் உதவும்” என்று இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கைக்கு கிடைத்துள்ள மொடர்னா தடுப்பூசிகளை கண்டி மாவட்டத்திற்கு வழங்க நடவடிக்கை எடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.