July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நாவலப்பிட்டியில் 13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: 11 பேர் தொடர்பில் விசாரணை!

நாவலப்பிட்டி பிரதேசத்தில் 13 வயது சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடையே சிறுமியின் தந்தையும், சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த உதவிய பெண்ணொருவரும் அடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு இந்த சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 6 பேர் தொடர்பில் தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அவர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதேவேளை கொழும்பு, கல்கிசை பிரதேசத்தில் 15 வயது சிறுமியொருவர் இணையத்தளத்தின் ஊடாக விற்கப்பட்டு துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டமை தொடர்பில் இதுவரையில் 41 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.