June 12, 2025 7:47:17

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘யால தேசிய பூங்காவில் 12,000 ஏக்கர் நிலத்தை வேறு தேவைகளுக்கு பயன்படுத்த அரசாங்கம் திட்டம்’

யால தேசிய பூங்காவில் 12,000 ஏக்கர் நிலத்தை வேறு தேவைகளுக்காக பயன்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இலங்கை சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் சங்கத்துடன் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிகவும் பெறுமதி மிக்க சுற்றுச்சூழல் அமைப்பான யால தேசிய பூங்காவை பாதுகாப்பது அனைவரின் பொறுப்பாகும்.யால பூங்காவில் அரசாங்கம் ஏதாவதொரு சட்ட விரோத நடவடிக்கைக்குச் சென்றால் அதற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி முன் நிற்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.