July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.வல்வெட்டித்துறையில் இரண்டு நாட்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று

யாழ்ப்பாணம்,வல்வெட்டித்துறையில் புதன்கிழமை (14) 38 பேர் உட்பட இரண்டு நாட்களில் 48 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

எழுமாறாக எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் 38 பேருக்கு தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடி மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் சந்தேகத்தின் அடிப்படையில் 156 பேரிடம் செவ்வாய்க்கிழமை (13) பி.சி.ஆர் மாதிரிகள் பெறப்பட்டன. அவர்களில் 29 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது.

மேலும் 32 பேரிடம் முன்னெடுக்கப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் 9 பேருக்கு தொற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை ஆதிகோவிலடியைச் சேர்ந்த ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்கு சென்று பி.சி.ஆர் பரிசோதனையை முன்னெடுத்துள்ளார். அவருக்கும் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.