![](https://i0.wp.com/tamilavani.com/wp-content/uploads/2020/11/ளறநற.jpg?fit=683%2C400&ssl=1)
இலங்கையில் மேலும் 37 கொவிட் தொற்றாளர்கள் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
19 பெண்களும் 18 ஆண்களும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,611 ஆக அதிகரித்துள்ளது.
அத்தோடு, இலங்கையில் இன்று (14) மாலை 6 மணிவரை மேலும் 1,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது.
இதையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2 இலட்சத்து 77,519 ஆக பதிவாகியுள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்று காரணமாக 20,931 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
அத்தோடு, நாட்டில் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 2 இலட்சத்து 53,014 ஆக உயர்வடைந்துள்ளது.