October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ- இந்திய உயர் ஸ்தானிகர் சந்திப்பு

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் கோபால் பாக்லே மற்றும் நிதி அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ ஆகியோருக்கு இடையே சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பு இன்று நிதி அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

இலங்கையின் புதிய நிதி அமைச்சருக்கு, இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனின் வாழ்த்துக் கடிதத்தையும் உயர் ஸ்தானிகர் பாக்லே கையளித்துள்ளார்.

கொவிட் 19 தொற்றுக்கு பின்னர் உலகளாவிய பொருளாதார மீட்சி என்ற பின்னணியில் பொருளாதாரத் துறையில் பரஸ்பர நலன்களுடன் தொடர்புடைய விடயங்கள் குறித்து இந்த சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

This slideshow requires JavaScript.