
பிரிட்டனின் மனித உரிமை நிலைமைகள் தொடர்பாக சீனா கொண்டுவரவுள்ள அறிக்கைக்கு இலங்கையும் கையொப்பமிட்டுள்ளது.
பிரிட்டன் மீதான சீனாவின் கூட்டு அறிக்கை ஐநா மனித உரிமைகள் சபையின் 47 ஆவது அமர்வில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
பிரிட்டனில் நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தாம் கவலைப்படுவதாக ஜெனிவாவுக்கான சீன பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கடுமையான இனவெறி, இன பாகுபாடு, வெறுப்புப் பேச்சு மற்றும் அதனுடன் தொடர்புடைய வன்முறைகள் நீண்ட காலமாக இருந்து வருவதாக சீன பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்வாறான பாகுபாட்டு நடவடிக்கைகள் பிரிட்டனின் காலனித்துவ எச்சங்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டன் மீது சீனா கொண்டுவரவுள்ள அறிக்கைக்கு இலங்கையும் ஆதரவு தெரிவித்துள்ளது.