July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

முகக் கவசம் அணியாதவர்களை எச்சரித்த ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல்: இருவர் கைது!

முகக்கவசம் அணியாது ரயிலில் ஏறியவர்களை எச்சரித்த ரயில் கட்டுப்பாட்டாளர் மீது தாக்குதல் நடத்திய குற்றசாட்டில் தெஹிவளை பொலிஸாரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று காலை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளரான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

வாதுவையில் இருந்து ராகமை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தெஹிவளை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்ட போது இளைஞர்கள் இருவர் முகக் கவசம் அணியாது ரயிலில் ஏறியுள்ளனர்.

இதன்போது அங்கிருந்த ரயில் கட்டுப்பாட்டாளர் முகக் கவசத்தை அணியுமாறு அவர்களை எச்சரித்துள்ள நிலையில், குறித்த இளைஞர்கள் இருவரும் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இதனைத் தொடர்ந்து அங்கு வந்த தெஹிவளை பொலிஸார், தாக்குதல் சம்பவம் தொடர்பில் 20 மற்றும் 27 வயதுடைய இளைஞர்கள் இருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.