July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

‘நீதி வழங்கும் செயற்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் இடம்பெறாவிட்டால் மாற்று நடவடிக்கை’

உயிர்த்த ஞாயிறு தாக்குல் தொடர்பில் நீதி வழங்கும் செயற்பாடு திருப்தியளிக்கக்கூடிய வகையில் வெளிப்படைத் தன்மையுடன் இடம்பெறாவிட்டால்,அதற்கான மாற்று நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்படும் என கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தலைமையிலான தேசிய கத்தோலிக்க பேச்சாளர் குழு ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது.

மேலும்,கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களுக்கு ஒரு மாதத்திற்குள் திருப்தியளிக்கக்கூடிய வகையில் பதில் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பார்கள் என தாம் நம்புவதாகவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொழும்பு பேராயருடன் ஐந்து ஆயர்கள், உதவி ஆயர்கள் உள்ளிட்ட 34 பேர் கையொப்பமிட்டு குறித்த கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ளனர்.