July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

”வடக்கில் சட்டம், ஒழுங்கை முறையாக பாதுகாப்பேன்”: சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார

”வடக்கு மாகாணத்தில் சட்டம் ஒழுங்கை முறையாக நடைமுறைப்படுத்தி மக்களுக்கு உயரிய சேவையை வழங்குவேன்” என்று புதிதாக பதவியேற்றுள்ள மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் ஏற்கனவே தான் கடமையாற்றியுள்ளதால் வடக்கு மக்களின் மனங்களை நன்கு அறிவேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாணத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபராக இன்று கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வில் உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கேசன்துறையில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று காலை 8.30 மணியளவில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார கடமைகளை பொறுப்பேற்றார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அவர்,  காங்கேசன்துறை, யாழ்ப்பாணம் பிராந்தியங்களில் பொலிஸ் அத்தியட்சகராகவும் மன்னார் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராகவும் முன்னர் கடமையாற்றியுள்ளேன் என்று அவர் குறிப்பிட்டார்.

இதன்படி வடக்கு மக்களின் மனங்களை நன்கறிந்த நான், சட்டம் ஒழுங்கை உரிய வகையில் நடைமுறைப்படுத்தி மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வைப்பேன் என்று கூறியுள்ளார்.