July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சமூக வலைத்தளங்களில் ஆபாசக் காட்சிகளை பதிவேற்றிய ஐவர் கைது!

இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் ஆபாச காட்சிகள் அடங்கிய படங்கள், வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டில் ஐந்து சந்தேகநபர்கள் இலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பொலிஸ் கணினி குற்றப்பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து குறித்த சந்தேகநபர்களை கடந்த வாரம் கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதன்படி, புறக்கோட்டை, பிலியந்தலை, பூஜாபிட்டிய, இராஜகிரிய ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 26 வயது முதல் 39 வயது வரையான நபர்கள் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதுமாத்திரமின்றி, திருமணம் முடிப்பதற்கு முன் காதலர்களாக இருந்த போது எடுக்கப்பட்ட படங்கள் மற்றும் ஆபாசக் காட்சிகளை, குறித்த படங்கள் மற்றும் காட்சிகளில் இருப்பவர்கள்  பிரிதொருவரை திருமணம் செய்யும் போது பல்வேறு சமூகவலைத்தளங்களில் பதிவேற்றும் நடவடிக்கைகள் தொடர்பாகவும் முறைப்பாடுகள் பல கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.