June 14, 2025 6:27:52

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஆசிரியர்களின் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்கிறது!

அரச பாடசாலைகளின் அதிபர், ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்கப் போராட்டம் தொடர்ந்தும் இடம்பெறுவதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டோர் கட்டாய தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்பட்டமைக்கு எதிராக ஆசிரியர் சங்கங்கள் நேற்று முதல் தொழிற்சங்கப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளன.

இதன்படி இணையவழி கற்பித்தல் நடவடிக்கைகளில் இருந்து அவர்கள் விலகியிருக்க தீர்மானித்துள்ளனர்.

இந்நிலையில் தமது கோரிக்கைகளுக்கு கல்வி அமைச்சு இதுவரையில் எவ்வித பதிலையும் வழங்கவில்லை என ஆசிரியர் சேவை சங்கத்தின் செயலாளர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

இதனால் தமது தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.