June 13, 2025 0:55:55

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

யாழ்.மாவட்டத்தில் 50,682 பேர் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றுள்ளனர்

யாழ்ப்பாண மாவட்டத்தில் இரண்டாம் கட்டத்துக்கான முதல் டோஸ் தடுப்பூசியை 50,682 பேர் இதுவரை பெற்றுக் கொண்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை முதல் யாழ்ப்பாண மாவட்டம் முழுவதும் தடுப்பூசி வழங்கும் திட்டம் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதற்கமைய இரண்டாம் கட்டத்தின் கீழ் 50,682 பேர் தடுப்பூசி பெற்றுக்கொண்டுள்ளனர்.

மேலும்,1,825 பேர் திங்கட்கிழமை (12) கொரோனாவுக்கான சினோபாம் தடுப்பூசியை பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.