June 11, 2025 14:18:42

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெண் மருத்துவரை மறைந்திருந்து புகைப்படம் எடுத்த வைத்தியருக்கு விளக்கமறியல்!

பெண் மருத்துவர் ஒருவர் ஆடை மாற்றும்போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மருத்துவர் ஒருவரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வெலிசறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வைத்தியர், பெண் வைத்தியரின் அறையில் மறைந்திருந்து அவர் உடை மாற்றும் போது புகைப்படம் எடுத்த குற்றச்சாட்டில் கடந்த 10 ஆம் திகதி ராகம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட  வைத்தியர் தேசிய வைத்தியசாலையில் பணியாற்றும் சம்மாந்துறை பகுதியை சேர்ந்த 35 வயது நபர் என பொலிஸார் தெரிவித்தனர்.

வைத்தியர் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இவர் மீது இது போன்று மேலும் 2 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.

சந்தேக நபரை பொலிஸார் நேற்று (11) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து நீதவான் அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிசறை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.